Apr 30, 2010

ஆசை நிராசையாய்

குறட்டை விட்டு தூங்க ஆசை
இரவிலும் வேலை பார்த்த பொழுது
சோறுக்கு ஆசை கூழ் குடித்து
உயிர் வாழ்ந்த பொழுது
கட்டிலுக்கு ஆசை கட்டாந்தரையில்
தூங்கிய பொழுது
செருப்புக்கு ஆசை முள்தரையில்
வெறுங்காலில் நடந்த பொழுது
புது சட்டை போட ஆசை
கந்தலில் காலம் கழித்த பொழுது
சொந்த வீட்டிற்கு ஆசை
வாடகையில் குடியிருந்த பொழுது
இத்தனைக்கும் ஆசைப்பட்ட உனக்கு
அத்தனையும் வாங்கி தர
நானிருக்கேன் இன்று
நீ இல்லையே என்னுடன்...

No comments: