குறட்டை விட்டு தூங்க ஆசை
இரவிலும் வேலை பார்த்த பொழுது
சோறுக்கு ஆசை கூழ் குடித்து
உயிர் வாழ்ந்த பொழுது
கட்டிலுக்கு ஆசை கட்டாந்தரையில்
தூங்கிய பொழுது
செருப்புக்கு ஆசை முள்தரையில்
வெறுங்காலில் நடந்த பொழுது
புது சட்டை போட ஆசை
கந்தலில் காலம் கழித்த பொழுது
சொந்த வீட்டிற்கு ஆசை
வாடகையில் குடியிருந்த பொழுது
இத்தனைக்கும் ஆசைப்பட்ட உனக்கு
அத்தனையும் வாங்கி தர
நானிருக்கேன் இன்று
நீ இல்லையே என்னுடன்...
Apr 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment