Apr 20, 2010

இலையுதிர் கால வண்டாய்

செயலிழந்த இயந்திரமாய்
வழுவிழந்து நிற்கிறேன்
உன் முகம் காணாமல்...
என் செயல் செய்ய
உன் கடைக்கண் பார்வை
சாவியை கனவிலும் தேடுகிறேன்
ஒரு பூட்டாக...
கூட்டாக வந்து என்
நிலையை குலைத்து
சென்ற உன்னை நினைத்து
பாட்டாக பாடுகிறேன்
"நீ வருவாய் என" என்று...
பூவின்றி தவிக்கும் இலையுதிர் கால
வண்டாய் ஏங்குகிறேன்
உன்னை காணும் காலம் வரை
எப்படி போக்குவேன் இங்கு என்று...
உன் பார்வை ஒருமுறை பட்டால்
இழந்ததையும் மீட்டுடுவேன்
இல்லாததையும் பெற்றிடுவேன்
என் ஏழேழு ஜென்மத்திற்க்கு...
தாயே அருள்புரிவாயே என் அங்காள பரமேஸ்வரி!!!

No comments: