May 3, 2010

நெஞ்சிலிருந்து நீங்குமா?

தனிமையில் தாழிட்டு கிடக்கும்
என் மனது ஏங்குது
நம்மூர் வயல் வெளியின்
நீர் பாயும் இரட்டை வரப்பில்
தினமும் ஒரு முறையாவது ஏறி
விளையாடவும்..
கரையில் அமர்ந்து கண்மாயின் சுற்றளவை
கண்ணிமையால் கணக்கு பண்ணவும்..
ஆலமர விழுதை ஊஞ்சலாய் மாற்றி
என் பள்ளி மாணவர்களுடன் துள்ளி
தூளியாடவும்..
ஏங்குது என் மனது ...

No comments: