வசை நீ பாடும் போதும்
இசை பாடுவதாய்
கேட்பது தான் காதலா?
உன் மடல் வந்து சேரும் போது
கடல் வந்து தாலாட்டுவதாய்
உணர்தல் தான் காதலா?
ரோட்டில் நீ நடந்துபோகும் போது
நாட்டில் இவள் மட்டும் தான் அழகென்று
எண்ணல் தான் காதலா?
படிக்காமல் கல்லூரிக்கு நான் வந்தால்
படித்து நீ சொல்லிக்கொடுப்பதும்
காதலா?
கண்ணில் நீ பட்டுவிட்டால்
விண்ணில் நான் பறப்பதும்
காதலா?
Aug 4, 2010
Subscribe to:
Posts (Atom)