Apr 22, 2010

மெளனஒலி

காகிதத்தில் கப்பல் விட்டு
கண்மாய் கரையில் அமர்ந்த எனக்கு
அலையோசையை மேளமாக்கி
கால் கொழுசை தாளமாக்கி
நடையை நடனமாக்கி
உன் பேச்செனும் பாட்டை ரசிக்க துடிக்க
மெளனஒலி எழுப்பிவிட்டு
செல்கிறாயே...
இந்த மெளனம் சம்மதமா இல்லை எனக்கு பின்
சங்கடமா?
சொல்லடி என் சங்க தமிழ் செல்வியே?

No comments: