Apr 21, 2010

தேடினேன்

காதலில் விழுந்து கடலை
போடாமல் மிச்சம்
செய்த நேரத்தில்
தேடினேன் அவளின்
செருப்பை கோவிலுக்கு வெளியே!!!

காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்று
மற்றவர்களுக்கு உபதேசம் கூறிவிட்டு
கடமைக் கண்ணிழ்ந்து
காலப் பொன்னிழந்து
தேடினேன் எட்டே முக்கால்
வடபழனி பேருந்தில்
அவள் வாராளா என்று...

இறந்த காலம் ஏற்கனவே
இறந்துவிட்டது
நிகழ்காலம் கேட்கிறது உனக்கு
எதிர்காலம் இன்னும் அவளால் இருக்கிறதா என்று?

No comments: