Jun 23, 2010

தேனீ

மொட்டுக்களும் பூவாகுது
பூக்களும் காயாகுது
காய்களும் கனியாகுது
உங்களின் மன்மத மகரந்தச் சேர்க்கையால்...

மலர்களுக்கு மகரந்தம்
மனிதர்களுக்கு ஓர் ஆனந்தம்

தேனிலும் இனிமை
கண்டதுண்டா மானிடர்
எவரும் இவ்வுலகில் ?

ஒற்றுமைக்கு ஓர் உறைவிடமாய்
கூட்டுகுடும்ப வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்
உள்ள நீங்கள்
மனிதர்களுக்கு
ஓர் உன்னதமான உதாரணமல்லவா?

No comments: