உறவினிலே ஒர் உன்னதமாய்
அன்பினிலே ஓர் மரகதமாய்
உன்னைப் பெற்றேன் நான்
என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு
சித்தெறும்பு என்னைக் கடித்தால் கூட
நாகப்பாம்பு கடித்த வலியை
நீ உணர்வாயே ஆத்தா...
கனமான கஞ்சிக்களையம்
நீ சுமந்து வந்தாலும்
கடைசிவரைப் பட்டினியாய் நீ இருப்பாயே
ஆத்தா...
பட்டணம் போய் நான் படிக்க நீ
பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா ஆத்தா?
கண் முழிச்சு நான் படிக்க
கடுங்காப்பிய போட்டு போட்டு
நீ தருவாயே ஆத்தா
என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு...
Jun 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment