காலையில் கண் முழித்தவுடன்
காண ஓடி வரும்
சகா அங்கிருக்க
இங்கிருக்கேன் எட்டாத தூரத்தில்...
பாசாங்கு செய்யாத நேசங்களை
விட்டு அந்நிய தேசங்களை
ஆக்கிரமித்தது தவறு தான் தோழனே...
இங்கு இந்த விடியாத நாட்களில்
விடிந்தவுடன் நினைக்க மறக்கவில்லை
உன் நினைவலைகளை...
சீக்கிரம் வந்துவிடுகிறேன் நண்பனே
இன்னும் ஆறே மாதத்தில்...
Jun 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment