சத்தம் இல்லாத கைப்பேசியிலும்
அடிக்கடி உன் அழைப்பு சத்தம்
கேட்பதாய் ஓர் உணர்வு...
நீ காலை வணக்கம் சொல்லவே
காலையில் சூரியனும் உதிப்பதாய்
ஓர் எண்ணல்...
ஒற்றை ரோஜாவும் உன் புன்சிரிப்பைக்
காப்பியடித்துத் தன் இதழை
விரிப்பதாய் ஒரு நம்பிக்கை...
வெளியே செல்லும் போது நீ பேசியதின்
விளைவால் தான் இந்த குயிலும் மைனாவும்
உன் குரலில் பாடுவதாய் ஒரு கணிப்பு...
உன்னால் ஏன் இந்த மாற்றம் என்னுள்?
Jun 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment