Jun 11, 2010

நீ செய்த தந்திரம் என்ன?

என்ன தந்திரம் செய்தாய்
என் நித்திரையிலும் உன் முகத்திரையைப்
பதிக்க...

சற்றும் எதிர்பார்க்கவில்லை இப்படி
முற்றிலும் என்னை
ஆக்கிரமிப்பாயென்று...

மனம் திருடப் படையெடுத்து
கனப்பொழுதில் இந்த
வெள்ளந்தியையும்
வெள்ளை கொடி காட்ட
வைத்துவிட்டாயே...

நீ கற்ற நேக்கு போக்குகளை
சாக்கு போக்கு சொல்லாமல்
இன்றாவது சொல்லிவிடு...

No comments: