Jun 10, 2010

என் மனதில்

நித்தம் நித்தம் உன்
அழைப்புகளுக்கு ஏங்கும்
ஒரு பித்தனாகிவிட்டதை
என் சித்தம் உணர்கிறேன்.

சத்தம் இல்லாத தனிமையிலும்
சத்தமாய் ஓங்கி ஒலிப்பது
உன் குரல் மட்டும் தான் என் மனதில்.

உனக்கு ஒவ்வொரு நாளும்
விடைகொடுக்கும் போதும்
எத்தனை எத்தனை படபடப்புகள்
என் மனதில்...

உன்னுடன் பேசாத நிமிடங்களில்
ஒரு படையே என்னை தாக்கும்
அளவு வலி என் மனதில்...

2 comments:

Unknown said...

Nanba enna achu????
Romba nall kavathai,
Romba nalluku apporam nan nall kavithai padikiran
valthugal
thodarattum umadu kavithat panni

இரமேஷ் இராமலிங்கம் said...

மிக்க நன்றி நண்பா..
முடிந்தவரை எழுதுகிறேன்...
தங்களைப் போன்றவர்களின்
ஊக்கத்தின் தாக்கம் தான் இந்த கவிதை வரிகள்...