மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி
என் தூக்கத்தை பாதியாக்கி
மனசுக்குள்ள வீதி உலா செல்கிறாயே
சகலமும் உங்களுக்குத் தானென்று
சலிக்காம நீ சொல்லும் போது
உள்ளுக்குள்ள என்ன வினை நடக்குதுன்னு
எனக்கே தெரியலம்மா
மங்காத அன்பை மட்டும் பொங்கி பொங்கி
என் மேல கொட்டும் போது
மயங்கி கொஞ்சம் சாயட்டுமா
உன் மடியில
எப்ப மாமா வருவீங்கனு எப்பயுமே
நீ கேட்கும் போது
என்ன தான் சொல்றதுன்னு
எனக்கே தெரியலம்மா
கண்டிப்பா வந்து உன் கரம் பிடிச்சு
கலகலப்பா உன்னை
பார்க்கும் போது தான்
என் பாரம் கொஞ்சம் இறங்கும்மா
Jun 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment