Jun 8, 2010

அகழ்

மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி
என் தூக்கத்தை பாதியாக்கி
மனசுக்குள்ள வீதி உலா செல்கிறாயே

சகலமும் உங்களுக்குத் தானென்று
சலிக்காம நீ சொல்லும் போது
உள்ளுக்குள்ள என்ன வினை நடக்குதுன்னு
எனக்கே தெரியலம்மா

மங்காத அன்பை மட்டும் பொங்கி பொங்கி
என் மேல கொட்டும் போது
மயங்கி கொஞ்சம் சாயட்டுமா
உன் மடியில

எப்ப மாமா வருவீங்கனு எப்பயுமே
நீ கேட்கும் போது
என்ன தான் சொல்றதுன்னு
எனக்கே தெரியலம்மா

கண்டிப்பா வந்து உன் கரம் பிடிச்சு
கலகலப்பா உன்னை
பார்க்கும் போது தான்
என் பாரம் கொஞ்சம் இறங்கும்மா

No comments: