என்னை காதலிக்கும் பொழுது
தேனே நிலவே என்று வருணித்தாயே
இப்பொழுது நீ
தேனிலவு செல்கிறாயே
உன் மாமன் மகளுடன்
நாம் ஊர் சுற்றிய மாமல்லபுரத்திற்க்கே...
என் கையில் பணமிருந்தால்
உன்னை பன்னீரில் குளிப்பாட்டுவேன்
என்றாயே அன்றொருநாள்
இன்று உன்னால் கண்ணீரில் நனைகிறேன்
நமக்கு மட்டும் திருமணம் நடந்தால்
உன்னை மகாராணிபோல் வைத்திருப்பேன் என்றாயே
இன்று உன்னால் மரண ராணியாகிறேன்
உனக்கொரு மகள் பிறந்தால்
மறந்தும் என் பெயர் வைக்காதே
பின்னொரு நாளில் உன்னைப்போல்
இன்னொருவன் அவளையும் கொல்ல...
May 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment