May 24, 2010

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என்னைப் பாதிக்கிறது பகலெல்லாம்
என் தூக்கத்தை சோதிக்கிறது இரவெல்லாம்...

உன்னை விட்டுப் பிரிந்த நாட்கள் விடாமல்
துரத்துதே வெகு தொலைவில் நானிருந்தும்...

உன்னையே உலகமென நினத்து வாழ்ந்த
என்னை இவ்வுலகத்தில் தவிக்க விட்டுப் போக
உனக்கெப்படி வந்தது மனம்...

தொட்டு அணைக்க ஆசைப் பட்டேன்
இப்படி உன்னைக் கடைசியாய்க்
கட்டி அணைத்து அழுவேனென்று
கடுகளவும் நினைக்கலேயே...

தனியாய் அழுகிறேன் தனிமையில்
உன் கட்டுக் கட்டான நினைவுகளுடன்...

1 comment:

Siva said...

நன்பரின் உன்மை கதை....