May 19, 2010

எழிலரசி

விரயமென்று நினைக்கவில்லை நீ
மறையும் வரை என் கண் உன்னைப் பின்
தொடர்வதை -ஆனால்
நரையும் நிலையை நீ அடைந்தாலும்
இந்தக் குறையாத உன் புன்னகையை
எனக்குத் தருவாயா?

மரையும் இவனுக்கு கழன்றதோ
என்று ஏளனம் செய்கின்றனர்
என் சுற்றத்தினர்
வெறுமை இல்லாத உன் உறவை
இவர்களுக்கு நீயே விளங்க வைப்பாயா
என் எழிலரசியே?

No comments: