May 18, 2010

அவள் தேடும் இவன்

கட்டுக்கடங்கா காளைகளே
என்னைத் தொட்டு அடக்க வாருங்கடா
காதல் என்ற ஜல்லிக்கட்டில்...

நானும் தேடுகிறேன்
சூழ்நிலையால் தொலைந்திடாத
சூரனை மட்டும்...

என்னை விட்டுப் பிரியாத
மனம் உனக்கிருந்தால்
என் தோள் கொடுத்துத் தாலாட்ட
நானிருக்கேன் நம் கனவிலும் கூட...

எனக்கு அதிகம் சம்பாதிப்பவன்
தேவையில்லை
சம்பாதித்ததைக் "குடி" நீரில்
கரைத்துவிடாமல் நீ இருந்தால் போதும்...

முழு நேரமும் அன்பைக் காட்ட நானிருக்கேன்
ஊதியத்தில் பாதியை
ஊதித் தள்ளாமல் நீ இருந்தால்...

No comments: