May 11, 2010

ஏக்கம்

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரியலேயே
ஏன் இந்த ஏக்கம் என்று...

சில பேர் சொல்லுறாங்க
அது தான் கவலையென்று..

மகிழ்ச்சியான வாழ்க்கையிலும் மிச்சமாய்
இருப்பது ஒருவகை ஏக்கம் தானே...

இன்னும் சில பேரோ அதை
ஆசையினும் சொல்கிறாங்க..

திரைகடல் ஓடி திரவியம் தேடி
ஆசயெல்லாம் நிவர்த்தி செஞ்சாலும்
இறங்காம் இருக்குதே இந்த
ஏக்கம் மட்டும்...

நம் மனசு எத நெனச்சு ஏங்குதுன்னு
எவருக்குமே தெரியலையே...

விவரம் தெரிஞ்ச யாராவது விளக்கி
கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏன் இந்த ஏக்கமுன்னு?

No comments: