உழைத்து உழைத்து தளர்ந்த
உடம்பு கேட்டது "ஓய்வு" என்றால் என்னவென்று?
நடந்து நடந்து தேய்ந்த
பாதங்கள் கேட்டது "செருப்பு" என்றால் என்னவென்று?
அல்லும் பகலும் தூக்கமின்றி உழைத்த
கண்கள் கேட்டது "தூக்கம்" என்றால் என்னவென்று?
இப்படி கோடான கோடி மக்களின்
வியர்வைக்கு விடைகொடுக்கும்
அந்த ஒருநாள் தான் உழைப்பாளர் தினமோ?
May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment