வண்ண மலரே உன் சிரிப்பில்
விழுந்த
கன்னக் குழியில் பல்லாங்குழி
விளையாடுகிறேன்
பகலெல்லாம் உன் நினைவால்...
கண்ணின் இமையும் தன் கடமையைச்
செய்ய மறக்குதே கண்ணே உன்னைக் கண்டவுடன்...
பாட்டி சுட்ட வடைக்கு பதுங்கி இருக்கும் காகமாய்
உன் மனதை திருட
காத்திருந்தேன் காலமெல்லாம்
திருடு போன என் மனதுடன்...
விடை கிடைக்குமென்று வீற்றிருக்கேன்
உன் கல்லூரிச் சாலையில் - ஆனால்
கிடைத்ததோ பிரியா விடை தான்
என் அலுவலகத்தில்...
வேலையிழந்து சாலையில் நின்றாலும்
எனக்கு மாமலையும் ஒரு கடுகுதான்
உன்னை அடைந்துவிட்டால்...
May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment