May 9, 2010

மனதை உயிலாய்

முல்லைப் பூவை முதலில்
கண்டேன் திருமுல்லைவாயிலில்
பார்வையம்பை பக்குவமாய் ஏவிவிட்டு
மேகமாய் செல்கிறாளே..
அவள் மீது மோகமாய் தவிக்கிறேன்
என் கனவிலும் கூட...
அன்றோ காற்றில் ஆடிய முல்லைக்கு தன்
தேர் தந்தான் பாரி
இன்றோ என் மனதை உயிலாய் அவள் பெயரில்
மாற்றிவிட்டேன்
இவ்வுயிலை ஏற்பாளா இல்லை
மனநிலை காப்பகத்திற்கு அளிப்பாளா
என்பது அவள் கையில்...

No comments: