May 17, 2010

அட்சய திருதியை

தன் அவலை கிருஷ்ணனுக்கு கொடுத்ததால்
குசேலன் குபேரன் ஆனானாம் அன்று.

இன்று ஒரு கிராமாவது தங்கம் வாங்க
பழைய பத்து கிராமை
அடகு வைக்கிறான்
ஆறறிவு படத்த அறிவுஜீவி ஒன்று.

இன்று குன்றிமணியளவு நகை வாங்கினால்
வருடம் முழுவதும் குன்றாமல் பெருகுமாம்...
மானிடா உன் மனநலம் மட்டும் தான் குன்றிப்போகும்
கடன் தொல்லையால்...
இதை என்று உணர்வாயடா...

திருமகளின் ஐஸ்வர்யலட்சுமியும், தான்ய லட்சுமியும்
தோன்றிய இந்நாளில் உன் மூளையை
சலவை செய்து ஒரு மூலையில் போடலாமா?

பக்தியை வியாபாரமாக்கி
பாமரனை பழியாக்கும்
இச்செயலைப் படித்தவனும் செய்கிறானே
பகுத்தறிவு இல்லாமல்...

சொன்னால் இம்ம்... கடவுள் உஷ்!!!
என்கிறான் பட்டம் பல பெற்றவனும்...

என்று ஒழியும் இந்த அட்சய திருட்டு...

No comments: