May 12, 2010

சுமை தாங்கி

விண்ணோடு விளையாடிய நம்மை
கண்ணால் கூட பார்க்க முடியாமல் இந்த
மண்ணை விட்டே துரத்தியதே
பணம் என்னும் பாதாளம்..

தங்கையின் திருமணச் சுமை தாழிட்டது
தம்பியின் படிப்பு வேலி போட்டது
தந்தையின் உடல்நலம் என்னை
கட்டிப் போட்டது உன்னை விட்டு போக...
இப்பொழுது அக்காவும் வந்து விட்டாள்
அவள் மகளுக்கு காதுகுத்தென்று...

வேலை போக பகுதி நேரத்திலும்
பம்பரமாய் சுற்றி
எப்படியோ சமாளித்து விட்டேன்
ஒவ்வொரு சுமையாய்...

சுமைகளை இறக்கிய மகிழ்ச்சியை
சுகமாய் அவளுடன் மகிழ
நெருங்கிய எனக்கு
போட்டு விட்டாள் ஒரு பாராங்கல்லை
என் தலையில் -அது
அவளுக்கு வேரொருவனுடன்
நிச்சயதார்த்தம் என்று...

தங்கச்சாமி என்று பெயர் வைத்த என் தந்தை
"சுமை தாங்கும் சாமி" என பெயர் வைக்க
மறந்து விட்டாரே!!!

No comments: