May 14, 2010

உள்ளே - வெளியே

உன் வீட்டு மாடியில் தங்கி பஞ்சம்
பிழைக்க வந்த எனக்கு
உன் நெஞ்சங்கூட்டில்
தஞ்சம் கொடுத்த
என் மஞ்சள் நிறத்தழகியே...

உன் பஞ்சு மனசால்
என்னைச் சிறைபிடித்து அதன்
உள்ளே தள்ளி விட்டாயே...

என்னை நல்லவன் என்று நம்பும்
உன் தந்தைக்குத் தெரிந்தால்
என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுவாரே...

செல்கிறேன் அன்பே
சேய் மனதில் குடியேறும் முன் முதலில் உன்
தாய் மனதில் இடம்பிடிக்க...

No comments: