May 7, 2010

கிராமங்களின் நிலை

பட்டுப்போன பனை மரமாய்
நீரின்றி
கண்ணுள்ள குருடர்களாய்
ஒளியின்றி
காலுள்ள நொன்டிகளாய்
சாலையின்றி
பள்ளியிருந்தும் முட்டாளாய்
வாத்தியாரின்றி
இருக்கும் எங்களுக்கு எதற்கு "இலவச கலர் டிவி"
சோற்றுக்கு ஒரு ரூபாய் அரிசி இருக்கு
கொழம்புக்கு முப்பது ரூபாய் வேண்டி இருக்கு...
இந்த நிலை எப்பொழுது மாறும் என்
இந்தியாவின் முதுகெலும்பில்...

No comments: