பட்டுப்போன பனை மரமாய்
நீரின்றி
கண்ணுள்ள குருடர்களாய்
ஒளியின்றி
காலுள்ள நொன்டிகளாய்
சாலையின்றி
பள்ளியிருந்தும் முட்டாளாய்
வாத்தியாரின்றி
இருக்கும் எங்களுக்கு எதற்கு "இலவச கலர் டிவி"
சோற்றுக்கு ஒரு ரூபாய் அரிசி இருக்கு
கொழம்புக்கு முப்பது ரூபாய் வேண்டி இருக்கு...
இந்த நிலை எப்பொழுது மாறும் என்
இந்தியாவின் முதுகெலும்பில்...
May 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment