May 27, 2010

பச்சைக் கொடி

பகல் கனவா போயிடுமோனு
வெறுமையா நினைக்கும் போது
நீ அனுப்பியக் குறுந்தகவல்
என்னை மகிழ்ச்சிக் கடலில் நீராட வைத்ததடி....

அடிக் கள்ளி
இம்புட்டு ஆசையை
அடக்கி நீயே வச்சுக்கிட்டு என்ன
அலைய விட்டுடேயே
உன்ன சுத்திச் சுத்திக் காதல் பண்ண!

நாத்திகனா இருந்தவன
ஆத்திகனா ஆக்கினேயே
என்ன கோயிலில சுத்தவிட்டு...

நீ மட்டும் பக்கத்தில் இருந்தால்
கட்டியணைச்சு முகத்தில்
ஒன்னு முதல் முறையா கொடுத்திருப்பேன்

ஓடி வாரேன்டி நீ காட்டிய பச்சைக் கொடியை
காதல் கொடினு அறிவிக்க...

No comments: