May 20, 2010

இரட்டை வேடம்

நண்பன் என்றால் நேசிக்கிறோம்
மனைவி என்றால் யோசிக்கிறோம்
வேறொரு சாதியாக வந்தால்...

இந்த இரட்டை வேடம்
அணிந்து இம்மையில் வாழ்கிறோமே...

கடவுள் ஒன்று உண்டு என்றால்
அவர் இதைச் சரி என்றும் சொல்வாரா?

தவறு என்று தெரிந்துமே
தவறாமல் கடைபிடிக்கும் இப்பழக்கத்தை
வேரறுக்க வேண்டாமா நாமாவது?

மாற்றம் வரும் வரும் என்று நாம்
மாறாமல் இருந்தால் மாறிவிடுமோ?

மாறுவோம் மாற்றிடுவோம் என்று
சூழுரைக்க வாருங்கள் தோழர்களே!!!

2 comments:

Siva said...

நன்பர் தொடங்கும் முயற்சி...

மறுமலர்சியாக வழ்த்துக்கள்...!!!

இரமேஷ் இராமலிங்கம் said...

மிக்க நன்றி நண்பர் நண்பரே!!!