படித்தது நம்நாட்டில் இலவசமாய்
பார்ப்பது வேலை
பக்கத்து நாட்டில் பரதேசியாய்...
முடிந்தவரை முயன்றும்
குடும்பத்தைக் காக்க
முடியாமல் பரதேசம் செல்பவரே
அதிகம் இல்லையா?
பத்தாம் தேதிக்குள்ள நான் அனுப்புன
பத்தாயிரம் ரூபாய
கடன் காரனுக்கு வட்டியோட
கொடுத்துட்டேன்டானு
எங்காத்தா சொல்லும் போது
ஆனந்தக் கண்ணீர் வந்து
அரை ட்ரவுசரையும் நனைச்சுடுச்சே!!!
குடும்பத்தில் உள்ளவர்கள்
படும் பாட்டைப் பார்த்து
பரதேசம் போக நினைப்பது தவறா?
தாய் மாமனுக்கு எங்கக்கா கூட
வெ.அழகர்சாமி துபாய் அபுதாபினு
போடுறதும் என் தவறா?
நேசித்தவர்களைக் காக்க
யோசித்தால் விடை
பரதேசம் தானே...
Jul 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment