பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் திளைக்கிறாயே
ஓரப் பார்வையில் ஒழிந்து என்னைப் பார்க்கும் போது
தீரா ஏக்கத்தில் திக்குமுக்காடி நிற்கிறேன்
மறைந்து நீ பார்த்தாலும்
மறக்காமல் நீ அனுப்பும் புன்னகைச் செய்தி
மறை போட்டு இறுக்கியதாய்
மனதில் பதித்துவிட்டாய்
போய் வருகிறேன் என்று நான் சொல்ல நீ
சேய் போல் தவிப்பதை என்னால்
தாங்க முடியவில்லை என்
தங்க நிறத்தழகியே...
Jul 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment