Jul 8, 2010

வேம்பின் மகத்துவம்

உன் நிழல் தவிர
அத்தனையும் கசப்பு தான் -ஆனால்
மனிதனுக்கோ கசப்பான இனிப்பு தான்

பட்டை முதல் கொட்டை வரை
பயனாய்ப் படுகிறாயே

அரைத்த உன் இலையை
அங்கமெல்லாம் தடவினால்
சொறியும் சிரங்கும் நெருங்குமோ?

உத்திராட்டாதி கதிர்களை ஒடுக்க
உன் சக்திக்கு நிகருமுண்டோ
இவ்வுலகில்?

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே
ஆலும் வேலும் பல்லுக்குறுதினு
சொன்னவன் நம்மவன்
இதற்கு காப்புரிமை பெறத் துடிப்பவன் அமெரிக்கனா?

No comments: