Jul 5, 2010

நிகழ் கால நிம்மதி

கனவு நனவாகுமானு என்னுள்
வினவிய காலம்

கண்டிப்பாக இலக்கை அடைவாய்னு
புதுத்தெம்பைப் பாய்ச்சிய காலம்

நம்பி உழைத்தும் முடிவில்
வெம்பி அழுத காலம்

படியேறி வேலை கேட்டும்
படு முட்டாள்னு முத்திரை குத்திய காலம்

அடுத்தவன் மரத்தில் நுங்கு திருடி
மாட்டிக்கொண்டு நொங்கு வாங்கிய காலம்

இயல்பாய் இருந்தவனையும் அவள் உன்னைத்தான்
பார்கிறாள்னு என் நண்பன் ஏத்திவிட்ட காலம்

நிகழ் கால நிம்மதியே
சோகங்கள் நிறைந்த இறந்த காலத்தையும்
எண்ணி மகிழ்வது தான் அல்லவோ?

No comments: