கனவு நனவாகுமானு என்னுள்
வினவிய காலம்
கண்டிப்பாக இலக்கை அடைவாய்னு
புதுத்தெம்பைப் பாய்ச்சிய காலம்
நம்பி உழைத்தும் முடிவில்
வெம்பி அழுத காலம்
படியேறி வேலை கேட்டும்
படு முட்டாள்னு முத்திரை குத்திய காலம்
அடுத்தவன் மரத்தில் நுங்கு திருடி
மாட்டிக்கொண்டு நொங்கு வாங்கிய காலம்
இயல்பாய் இருந்தவனையும் அவள் உன்னைத்தான்
பார்கிறாள்னு என் நண்பன் ஏத்திவிட்ட காலம்
நிகழ் கால நிம்மதியே
சோகங்கள் நிறைந்த இறந்த காலத்தையும்
எண்ணி மகிழ்வது தான் அல்லவோ?
Jul 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment