பாவையர்கள் பல்லாங்குழியாட
காளையர்கள் கபடியாடிய காலம்
பசுமரமாய் நிற்குதே நெஞ்சமெல்லாம்...
மங்கும் நேரத்தில் ஆடிய கள்ளன் போலீஸில்
எங்கு போய் ஒழிந்தான் இவனென்று
ஓடி ஆடித் தேடிய நினைவுகள்
ஒழியாமல் வருதே...
மங்காத்தாள் ஆடியது
எங்காத்தாளுக்கு தெரியவர
அத மறக்க அவ போட்ட சூட்ட
மேலோகம் போனாலும்
எப்படித்தான் மறப்பது...
வெட்டியாக இருக்கும் போது
போட்டி போட்டு விளையாண்ட
கிட்டி விளையாட்டு கூட
எப்படி இருக்கும் தெரியும்மா?...
விடுமுறை நாளில் குளிக்க போனால்
கண்மாயில குதியாட்டம் போட்டுத் குளித்தவனுக்கு
சவருல குளிக்கும் சந்தனக்குளியல் கூட
சாக்கடைக் குளியல் தானே...
Jul 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment