புற்றீசலாய் கல்லூரிகள் உதிப்பதும்
பெருமை தான் -ஆனால்
கட்டமைப்பற்ற கல்லூரிகள்
கட்டுக்கடங்காமல் உதிப்பது
சிறுமை தான் பெருமை அல்லவே...
கல்லூரியைக் கடையாக்கி
கலந்தாய்வில் விற்பனையா
கல்லூரி இடங்கள்
இன்றைய கல்விமுறையில்...
ஆயிரங்கூடங்கள் கூட முளைக்கட்டும்
அத்தனையிலும் கட்டமைப்பு வசதி இருந்தால்...
அன்று படித்தவன் ஆரம்பித்தான் கல்விக்கூடம்
இன்று மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
ஆரம்பிக்கிறான் கல்வியென்ற வியாபாரக்கூடம்...
ஊருக்கு நூறு கல்லூரிகள்
பேருக்கு ஓரிரு தொழிற்சாலைகள் ஆங்காங்கே
இந்த நிலை எப்பொழுது மாறும் என் தாயகத்தில்?
Jul 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment