Jul 12, 2010

துடிக்கிறேன்...

செல்லம் செல்லம் என்று
என் செவிகுளிரச் சொல்லும் போது
பள்ளத்தை நோக்கி ஓடும் நீராய்
உன் பக்கத்தில் வரத்துடிக்கிறேன்

அன்பே அன்பே என்று
ஆசையாய்ச் சொல்லும் போது
உன் அருகில் வந்து அணைக்கத் துடிக்கிறேன்

கண்ணே கண்ணே என்று
என் கண் குளிரச் சொல்லும் போது
உன் கண்ணுக்குள் உள்ள நிலவை
கலங்காமல் காக்கத் துடிக்கிறேன்

மாமா மாமா என்று
என் மனங்குளிரச் சொல்லும் போது
உன் மடியில் சாய்ந்து
மனசாரத் தூங்கத் துடிக்கிறேன்

1 comment:

Unknown said...

mama.. mayakkamaa ??