கண் சிமிட்டும் நேரத்தில் மின்மினியாய்
வந்து சென்ற உன்னை நினைத்து
வருடக்கணக்கில் தவம்
கிடக்கிறேன் இனி உன்னை காண்பேனா
என்று?
பொழுதொரு கணத்திலும்
பொருமையாய் யோசிக்கிறேன்
மீதமுள்ள வாழ்நாளை
மீட்சியடைய செய்யவந்த
கண்மணியா
என்று?
மின்மினியா இல்லை நீ எந்தன் கண்மணியா
என்று எனக்கு உணர்த்தும் நாளை
எண்ணி ஏங்குகிறேன்
என் பொன்மணியே!!!
Mar 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment