Mar 29, 2010

சுடர்கொடியே

நடுக்கடலில் நிலை தவறிய படகை
இழுத்து வந்து கரை சேர்த்த அலையை போல்
வாடி கருகிய பயிரை சாக விடாமல்
பெய்த மழையை போல்
தோல்வியின் பிடியில் உழன்று கழண்ட என் வாழ்வில்
சுடரொளி ஏற்ற வந்த சுடர்கொடியே
இத்தனை நாளாய் அமாவாசையில்
தவித்த எனக்கு பெளர்ணமியாக இருப்பாயா
என் வாழ்வெல்லாம்?

No comments: