நடுக்கடலில் நிலை தவறிய படகை
இழுத்து வந்து கரை சேர்த்த அலையை போல்
வாடி கருகிய பயிரை சாக விடாமல்
பெய்த மழையை போல்
தோல்வியின் பிடியில் உழன்று கழண்ட என் வாழ்வில்
சுடரொளி ஏற்ற வந்த சுடர்கொடியே
இத்தனை நாளாய் அமாவாசையில்
தவித்த எனக்கு பெளர்ணமியாக இருப்பாயா
என் வாழ்வெல்லாம்?
Mar 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment